ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். 16 வார்த்தை ராமாயணம் "பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார் மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார் இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார் துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்" விளக்கம்: 1. பிறந்தார் - ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது. 2.வளர்ந்தார் - தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது. 3. கற்றார் - வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது. 4.பெற்றார் - வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது. 5.மணந்தார் - ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது. 6.சிறந்தார் - அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது. 7.துறந்தார் - கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது. 8. நெகிழ்ந்தார் - *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது. *குகனார் அன்பில் நெகிழ்ந்தது. *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது. *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது. *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது. *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது. *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது. *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது. 9. இழந்தார் -மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது. 10. அலைந்தார் - அன்னை சீதையை தேடி அலைந்தது. 11.அழித்தார் - இலங்கையை அழித்தது. 12.செழித்தார் - *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது. *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது. 13.துறந்தார் - அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது. 13.துவண்டார் - அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது. 15. ஆண்டார் - என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது. 16.மீண்டார் - பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது". பெருமாள் திருமொழி பத்தாம் திருமொழி - அங்கணெடுமதின் ஸ்ரீராமாயண கதைச்சுருக்கம் அங்கணெடுமதிள்புடைசூழ் அயோத்தியென்னும் அணிநகரத்து உலகனைத்தும்விளக்கும்சோதி * வெங்கதிரோன்குலத்துக்கு ஓர்விளக்காய்த்தோன்றி விண்முழுதும் உயக்கொண்டவீரன் தன்னை * செங்கணெடுங்கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * எங்கள்தனிமுதல்வனைஎம்பெருமான்தன்னை என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2) 1 741 வந்தெதிர்ந்ததாடகைதன்உரத்தைக்கீறி வருகுருதிபொழிதரவன்கணையொன்றேவி * மந்திரங்கொள்மறைமுனிவன்வேள்விகாத்து வல்லரக்கருயிருண்டமைந்தன்காண்மின் * செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந்தண்சோலைத் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * அந்தணர்களொருமூவாயிரவர் ஏத்த அணிமணியாசனத்திருந்தஅம்மான்தானே. 2 742 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச் சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி * வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை * தெவ்வரஞ்சு நெடும்புரிசைஉயர்ந்தபாங்கர்த் தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் * எவ்வரிவெஞ்சிலைத் தடக்கைஇராமன்தன்னை இறைஞ்சுவாரிணையடியேஇறைஞ்சினேனே. 3 743 ஸ்ரீ ராம நாம மகிமை.. ..2018 ஸ்ரீ ராம நவமி -2019 ஸ்ரீ ராம சரித பஜனை.... 2020 மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் .... 2020 ராம ராம ராம ராம !! - வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிசனம் .. 2020 ராம ராம ஜெய ராஜாராம் ராம ராம ஜெய சீதா ராம். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ! அன்புடன் அனுபிரேம்